கேத்தரின் பூத் || கிறிஸ்தவ வரலாறு ||

 கிறிஸ்தவ வரலாறு


கேத்தரின் பூத் 

(1829-1890)

(சால்வேஷன் ஆர்மி)

குழந்தை பருவம்

கேத்தரீன் ஜனவரி 17, 1829 இல் இங்கிலாந்தின் டெர்பிஷையர் நகரில் மெத்தடிஸ்ட் திருச்சபையில் அங்கத்தினர்களாக இருந்த மம்ஃபோர்ட் மற்றும் சாரா மில்வர்ட் தம்பதியினரின் ஐந்தாம் குழந்தை பிறந்தார். இவரது தந்தையார் திருச்சபையில் சாதாரண உதவி போதகராக பணியாற்றிக்கொண்டு,போக்குவரத்து வாகனம் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டு இருந்தார். இவரது தாயார் சிறுவிலிருந்தே கேத்தரீனுக்கு கிறிஸ்தவ போதனைகளையும், ஒழுக்கத்தையும், சமூக சேவைகளையும், அதிகமாக கற்றுக்கொடுத்தார்.


பள்ளி வாழ்க்கை

சிறு வயதிலிருந்தே, கேத்தரின் கல்வி அறிவிலும் கேள்வி ஞானத்திலும் சிறந்து விளங்கினாள். தன்னுடைய 12 வயதுக்கு முன்பே வேதாகமத்தை எட்டு முறை முழுவதுமாக வாசித்து முடித்துவிட்டார்.இங்கிலாந்தில் தேனீர் தயாரிக்கும் சீனி தயாரிக்கும் ஆப்பிரிக்க மக்களை அடிமைகளாகப் பயன்படுத்துவதை அறிந்துகொண்ட கேத்தரீன், அன்றிலிருந்து சீனி சாப்பிடுவதையும் கைவிட்டுவிட்டார்.இரவுக்குப் பிறகு தனது தந்தையாரிடம் அன்றைய காலகட்டத்தில் இருந்த சமூகப் பிரச்சினைகளைப் பற்றி அதிகம் விவாதித்தார். 


வலிய பருவம் :

கேத்தரின் தனது பதினான்கு முதல் பதினாறு வயது வரையான கால வேதாகம கோட்பாடுகள்(Biblical Doctrines), மெய்யியல் போதனைகள்(Philosophy), இறையியல் போதனைகள் (Theology), மற்றும் திருச்சபை சரித்திரங்கள் (Church History) போன்ற பாடங்களை ஆர்வத்துடன் தானாகவே விரும்பி படித்தார்.குறிப்பாக மெத்தடிஸ்ட் திருச்சபையை தோற்றுவித்த ஜான் வெஸ்லி ஃபின்னி அவர்களின் புத்தகங்கள் வாசித்தபோது சொந்த இரட்சிப்பை குறித்து உறுதிபடுத்தியதுமல்லாமல் கடவுளுக்கும் திருச்சபைக்கும் சேவை செய்யும் உந்துதலை பெற ஆரம்பித்தார்கள். 


கேத்தரீன் இளம் வாலிபர் ஐக்கியத்தின் பொறுபாளராகவும் (Juvenile Temperance Society), ஒரு கிறிஸ்தவ பத்திரிகை கட்டுரைகளை எழுதிக்கொண்டிருக்கவும் செய்தார். கேத்தரீன் நன்றாக பாடுபவராகவும் இசையை மீட்டுபவராகவும் இருந்ததால் அங்கிருந்த பேண்ட் ஆஃப் ஹோப் என்ற அமைப்பில் அங்கத்தினராக இருந்தார். இவர் லண்டனில் பிரிக்ஸ்டன் பகுதியில் இருந்த வெஸ்லியன் மெதடிஸ்ட் திருச்சபையில் அங்கத்தினராக இருந்து தீவிர உறுப்பினராக திருச்சபையில் செயலாற்றினார். 


மெதடிஸ்ட் திருச்சபை சீர்திருத்தம் :


கேத்தரின் வாழ்ந்த காலத்தில் இருந்த மெத்தடிஸ்ட் திருச்சபைகளில் அதிகார துஷ்பிரயோகங்களினாலும், அரசியல் பிரச்சினைகளினாலும் குழப்பங்கள் மற்றும் குழப்பங்கள் நிறைந்திருந்தன. இந்நிலையில் மகிமையை இழந்துகொண்டிருந்த மெத்தடிஸ்ட் திருச்சபையில் சீர்திருத்தங்கள் தேவை என்று பலர் குரல் கொடுக்க ஆரம்பித்தார்கள். கேத்தரீனும் இதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இதனால் மெத்தடிஸ்ட் திருச்சபைகளுக்குள் ஒரு சீர்திருத்த இயக்கம் எழுச்சி பெற ஆரம்பித்தது. ஆனால் இந்த இயக்கமானது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று மெத்தடிஸ்ட் திருச்சபை தலைவர்கள் கருதினார்கள். 


ஆழ்ந்த இறை நம்பிக்கையும் வேதாகம அறிவும் கொண்ட கேத்தரீன், திருச்சபைகளில் சீர்திருத்தத்தை கொண்டு வர முயற்சிப்பவர்களுக்கு ஆதரவாக பேசவும் தொடங்கினார். இந்நிலையில் 1850 இல் மெதடிஸ்ட் சீர்திருத்தவாதிகளை கண்டித்து பேசுமாறும் எழுதுமாறும் மெத்தடிஸ்ட் திருச்சபை தலைவர்கள் கேத்தரினுக்கு நெருக்கடி கொடுத்தனர். இதற்கு கேத்தரீன் மறுத்ததால், வெஸ்லியன் மெதடிஸ்டு திருச்சபையில் இருந்து வெளியேற்றப்பட்டார். இவரோடு பல சீர்திருத்தவாதிகளும் திருச்சபையில் இருந்து நீக்கப்பட்டனர்.


கேத்தரீன் திருமணம் :


வில்லியம் பூத் என்பவர் இங்கிலாந்தில் ஒரு மெதடிஸ்ட் திருச்சபையில் இளம் போதகராக பணியாற்றிக்கொண்டு இருந்தார். இவருடைய போதனைகளில் நாம் அநீதிகளை அறுத்து எறிய வேண்டும், அடிமையாக்கப்பட்டவர்கள் விடுதலை பெற வேண்டும், மனமுடைந்தவர்களை விடுதலை செய்ய வேண்டும், ஒடுக்கப்பட்டவர்கள் தேற்றப்பட வேண்டும், நம்மிடம் இருக்கும் உணவையும், உடைகளையும், பொருட்களையும் தேவையோடு இருப்பவர்களுக்கு பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்ற புரட்சிகரமான போதனைகளை போதித்து சமூக மேம்பாட்டிற்காக அறைகூவல் விடுத்தார்.ஒருமுறை கேத்தரீன் பங்குபெறும் சேப்பல்) 7, ஏப்ரல் 1852 இல் வில்லியம் பூத் பிரசங்கிக்க வந்திருந்தார்.அப்போது வில்லியம் பூத் போதனையில் ஈர்க்கப்பட்ட கேத்தரீன், "இந்த திருச்சபையில் இதுவரை நான் கேட்ட செய்திகளில் இது மிகச் சிறந்த ஒன்று அவரிடம் தைரியமாக கூறி திருச்சபையின் மறுமலர்ச்சி குறித்து தனது பாரதத்தை பகிர்ந்து கொண்டார். 


இந்நிலையில் சுமார் 3 ஆண்டுகளாக கடிதங்கள் மூலமாக திருச்சபை மறுமலர்ச்சி அடைய வேண்டிய காரியங்களை கடிதங்கள் மூலமாக ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டார்கள். இறுதியில் இருவருடைய எண்ணங்களும் ஒன்றித்துப்போகவே 1855 ஆம் ஆண்டு ஜூன் 16 ஆம் தேதி லண்டனில் உள்ள ஸ்டாக்வெல் கிரீன் திருச்சபையில் (ஸ்டாக்வெல் கிரீன் காங்கிரேஷனல் சர்ச்) வில்லியம் பூத் மற்றும் கேத்தரீன் திருமணம் செய்து கொண்டனர்.


குடும்பமாக ஊழியம்:


வில்லியம் பூத் மற்றும் கேத்தரின் பூத் இருவரும் பொது வாழ்க்கையில் கிறிஸ்தவ ஊழியத்தில் சவால் நிறைந்த பணிகளை செய்துவந்தார்கள். இவர்கள் மெதடிஸ்ட் திருச்சபையின் விழுமியங்களைப் பகிர்ந்துகொண்டனர், இன்று இரட்சிக்கப்படாதவர்களையும், சமூகத்தால் புறக்கணிக்கப் பட்டவர்களையும்,கிறிஸ்தவர்களாக இருந்தும் திருச்சபைக்கு வராதவர்களைத் தேடிச்சென்று கிறிஸ்துவின் நற்செய்தியைப் பகிர்ந்துகொண்டார்கள்.


திருச்சபையில் பெண்கள் வேதத்தை போதிக்கலாமா?


திருச்சபையின் எண்ணிக்கையில் சுமார் 50% இருக்கும் பெண்களின் பங்களிப்பால் திருச்சபையில் எழுப்புதலும், மறுமலர்ச்சியும், சமூக முன்னேற்றமும், ஆண், பெண் இடைவெளியும் குறையும் என்று கேத்தரீன் உறுதியாக நம்பினார். எப்படியெனில் திருச்சபை ஆராதனைகளில் பெண்கள்தான் அதிக அளவில் கலந்துகொள்பவர்களாகவும் பக்தி மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றில் நிறைந்திருப்பவர்களாகவும் இருந்தனர். ஆனால் வில்லியம் பூத், பெண்கள் திருச்சபையில் போதிப்பதையும் பெண்கள் தலைமைத்துவத்திற்கு வருவதையும் விரும்புகின்றனர். ஏனெனில் காலம் காலமாக ஆணாதிக்கம் நிறைந்த திருச்சபையானது வேதவசனங்களுக்கு தவறான வியாக்கியானம் கொடுத்து பெண்களை ஆண்களுக்கு அடிமைபடுத்திக்கொண்டே இருந்தது. 


வில்லியம் பூத்தின் எதிர்ப்பு மற்றும் ஆதரவின்மை ஆகியவை கேத்தரீன் அவர்களுடைய வாதங்களை மேலும் கூர்மைப்படுத்தவும், வேதாகமத்தை இன்னும் ஆழமாக தியானிக்கவும் தூண்டியது. இந்நிலையில் ஆண், பெண் சமத்துவத்தை ஆதரிக்கும் வேதாகம விளக்கத்தை கேத்தரீன் நன்கு பயன்படுத்தி, பெண்கள் திருச்சபையில் போதிக்க அனுமதி மறுப்பது என்பது கடவுளின் கட்டளைகளுக்கு எதிரானது என்றும் பெண்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என்றும் சிறந்தமுறையில் வில்லியம் பூத்திடம் எதிர்வாதம் வைத்தார்.


சூழ்நிலைகள் பொருத்தமானது:


கேத்தரின்,தைரியம் கொண்டவராக ஆற்றல்மிக்கவராக,சிறப்பான பேச்சாளராக,திறமைமிக்கவராக இருந்தார்.இவர் ஒரு மெதடிஸ்ட் திருச்சபையின் போதகருடைய மனைவியாக இருந்தாலும் அவர் சார்ந்த திருச்சபையில் போதகம் செய்யவில்லை, அவருடைய கணவரான வில்லியம் பூதத்தை அனுமதிக்கவில்லை.இந்நிலையில் 1860 ஆம் ஆண்டு பெந்தேகோஸ்தே வில்லியம் விழா கீழே வந்தது. ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் இருந்தபோதும் கேத்தரீன் பேசும்படி எழும்பி நின்று நான் ஒரு வார்த்தை சொல்ல விரும்புகிறேன் என்று திடீரென்று அறிவித்தபோது, ​​எல்லோரையும் போலவே ஆச்சரியப்பட்ட வில்லியம் பூத், உடனே சுதாரித்துக்கொண்டு இன்று மாலை ஆராதனையில் கேத்தரீன் பிரசங்கிக்க போவதாக அறிவித்துவிட்டார்.


அன்று மாலை, ஒரு பெண் பிரசங்கம் செய்யப்போகின்றார் என்ற செய்தியானது அநேகருடைய ஆர்வத்தை தூண்டியதால் பலர் ஆலயத்திற்கு வந்திருந்தார்கள். அப்போது கேத்தரீன் செய்த பிரசங்கமானது அநேகரை ஆச்சரியத்தின் உச்சகட்டத்திற்கே கொண்டுசென்றுகடவுளுடைய வார்த்தைக்கு கீழ்படிந்த அறைகூவல் விடுத்ததாக இருந்தது.பெண்களுக்கு சமூக உரிமைகள் குறைவாக கொடுக்கப்பட்டிருந்த பள்ளி,திருச்சபையில் பெண்களுக்கு பிரசங்கம் செய்யும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட காலத்தில்,கேத்தரீனின் பிரசங்கம் என்பது ஒரு அபூர்வ நிகழ்வாக இருந்தது. கேத்தரீனின் பிரசங்கத்தை கேட்ட வில்லியம் பூத், இனி பெண்கள் திருச்சபையில் தாராளமாக போதிக்கலாம் என்று சிந்திக்கும் நிலைக்கு வந்தார்.


*பெண்ணீயத்தின் குரல் (Feminist Voice):* அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு? என்ற கேள்விகள் ஆண்களால் கேட்கப்பட்ட காலத்தில் கேத்தரீன் பொங்கியெழுந்தார். கிறிஸ்தவ திருச்சபைகள், ஆண்களுக்கும் பெண்களுக்கும் விடுதலை நற்செய்தியை அறிவித்துக்கொண்டு இருக்கும்போது பெண்களிடம் இருக்கும் பன்முக ஊழிய தாலந்துகளை வெளிப்படுத்துவதைத் தடுப்பது நியாயமான செயலா? என்று எதிர் கேள்விகள் எழுப்பி எல்லோரையும் சிந்திக்க வைத்தார்.  


அறிவுரீதியாக பெண்கள்,ஆண்களுக்கு சமமானவர்கள் என்று கேத்தரீன் உறுதியாக நம்பினார். ஆனால் பெண்களுக்கு போதிய பயிற்சி கொடுக்காதாலும் சரியான வாய்ப்புகளை வழங்காதாலும் பெண்கள் தாழ்ந்தநிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார்கள் என்று குமுறினார்.மேலும் திருச்சபையில் பெண்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று கூறிய பவுலின் வாசகங்கள் (I கோரி 14:34) தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, திருச்சபைக்கு நஷ்டம், உலகத்திற்கு தீமை மற்றும் கடவுளுக்கு அவமதிப்பு என்று கூறப்பட்டது. குரல் கொடுத்து, பெண்களுக்கு திருச்சபையில் பிரசங்கிக்கும் உரிமை உண்டு என்றும் கேத்தரின் உறுதியாக எடுத்துரைத்தார்.


திருச்சபை ஊழியத்தில் பெண்களின் பங்கு:


கடவுளுக்கு முன்பாக ஆண்கள் மற்றும் பெண்கள் எல்லோரும் சமம் என்றும், பெண்களும் ஆண்களைப்போலவே கடவுளின் சாயலில் படைக்கப்பட்டவர்கள் என்றும் கேத்தரின் (ஆதி. 1:27) பிரசங்கம் பண்ணினார். திருச்சபையில் பெண்களின் பங்கு பற்றிய தனது கருத்துக்களை, அப்போஸ்தலனாகிய பவுல் கலாத்தியர்களுக்கு எழுதிய நிருபத்திலிருந்து (3:28) மேற்கோள் கான்பித்து,மக்களை சிந்திக்க வைத்தார். இதனால் கிறிஸ்து இயேசுவுக்குள் ஆண் என்றும் இல்லை; பெண் என்றும் இல்லை.ஏனெனில் எல்லோரும் கிறிஸ்துவுக்குள் சமம் தான். ஆகவே பெண்களுக்கு திருச்சபையில் போதிக்கும் வாய்ப்புகளையும் தலைமைத்துவத்திற்கும் தகுதியானவர்கள் என்று இறையியல் பண்டிதர்களையே மாற்றி யோசிக்க வைத்தார். 


அப்படியே மனுக்குலம் பாவத்தில் வீழ்ச்சி அடைந்தபோது (ஆதி 3), உண்டான பாவத்தின் விளைவாக பெண்கள், ஆண்களுக்கு அடிமைகளாகிப்போனார்கள் (ஆதி 3:16) என்று ஏற்றுக்கொண்ட கேத்தரீன், ஆனால் பெண்களை அங்கேயே விட்டுவிடாமல் இயேசு கிறிஸ்து கல்வாரியால் சிந்திய இரத்தத்தினாலும், கடவுளின் கிருபையினாலும் பாவத்திலிருந்து மீட்டெடுக்கப்பட்டுவிட்டார்கள். இப்போது கிறிஸ்துவுக்குள் எல்லா பெண்களும் ஆண்களுக்கு சமம்தான். இதை திருச்சபையானது நிராகரிப்பது எந்த வகையிலும் சரியல்ல என்று ஆணையிட்டார்.


பெண்கள் திருச்சபையில் பிரசங்கிப்பதை கடவுளுடைய வார்த்தை தடை செய்யுமாயின் கடவுளுக்கு மிகவும் அர்ப்பணிப்புடன் பணிபுரியும் பல பெண்கள் பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்படுவதை வேதத்தில் பார்க்கிறோம்.ஆகவே கடவுளுடைய வார்த்தையும் பரிசுத்த ஆவியானவரும் ஒருவருக்கொருவர் முரண்பட முடியாது என்று முழங்கினார். இவருடைய வேதபூர்வமான போதனைகளும் கிறிஸ்தவ உலகமே அதிசயமாய் பார்த்தது. 


பெண்களுக்கு ஆதரவு :


தனது கணவர் வில்லியம் பூத் கொடுத்த ஊக்கத்தினால், கேத்தரீன் அம்மையார் 1859 ஆம் ஆண்டு பெண்கள் ஊழியம் (பெமினிஸ்ட் அமைச்சகம்)* என்ற புத்தகத்தில் பெண்கள் திருச்சபையில் பிரசங்கம் செய்ய உரிமை உண்டு என்று எழுதினார். இந்த புத்தகமானது தன்னைப்போலவே பெண்களும் திருச்சபையில் பிரசங்கம் செய்யலாம் என்று குரல் கொடுத்த அமெரிக்க பெண்மணி திருமதி. ஃபோப் பால்மர் என்பவருக்கு ஆதரவாக இருந்தது. 


இந்த புத்தகத்தில் கேத்தரீன் எழுத்துக்கள் மூன்று முக்கிய கொள்கைகளை வலியுறுத்தியது. முதலில், பெண்கள் ஆண்களை விட இயற்கையாகவோ அல்லது ஒழுக்க ரீதியில் தாழ்ந்தவர்கள் அல்ல என்பதை வலியுறுத்தியது. இரண்டாவதாக, பெண்கள் ஊழியம் செய்வதற்கு மறுப்பு தெரிவிக்க வேதாகம பூர்வமாக எந்த ஒரு காரணமும் இல்லை என்று உறுதியாக நம்பினார்கள். மூன்றாவதாக, வேதாகமம் வற்புறுத்துவதை, பரிசுத்த ஆவியானவர் ஆசீர்வதித்துள்ளார். ஆகவே பெண்களுக்கு திருச்சபையில் சம வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.


கேத்தரின் எழுத்து பணிகள்


பெண்களின் ஆன்மீகப் புரிதலை இழிவுபடுத்தி, மட்டுப்படுத்திய ஒரு உள்ளூர் போதகருக்கு மறுப்பு தெரிவித்து கேத்தரின் தனது எழுத்துப் பணியைத் தொடங்கினார். இவையே பிற்காலத்தில் பல புத்தகங்களை எழுத அடித்தளமாக இருந்தது.அவை நடைமுறை மதம் (1879), Aggressive Christianity (1881), Godliness (1882), Life and Death (1883), The Salvation Army in Relation to the Church and State (1883) மற்றும் Popular கிறிஸ்தவம் (1883) ஆகியவை முக்கியமானவை ஆகும்.கேத்தரின் அம்மையார் இருபது ஆண்டுகளுக்கு மேலாக ஆண்களைப் போலவே பெண்களும் திருச்சபையில் பிரசங்கிக்கும் உரிமைக்காக குரல் கொடுத்து வந்தார்.


இரட்சண்ய சேனை (சால்வேஷன் ஆர்மி) உருவாக்கம்: 


வில்லியம் பூத் மற்றும் கேத்தரின் பூத் இருவரும் திருச்சபைகளில் எழுப்புதல் தீ பற்றியெறிந்து மறுமலர்ச்சி ஏற்பட, தங்களை சுவிசேஷகர்களாக அற்பணித்துக்கொண்டு,மெத்தடிஸ்ட் திருச்சபையில் இருந்து விலகி, நற்செய்தி பணியாளர்களாக பணியாற்றிக் கொண்டிருந்தனர். இதற்காக 1865 இல் வில்லியம் பூத் லண்டன் நகரில் கிறிஸ்டியன் மிஷன் (The Christian Mission) என்ற இயக்கத்தை ஆரம்பித்தார். இந்த ஊழியம் கடும் சவாலாக இருந்தது.எப்படியெனில் இந்த நேரத்தில் வில்லியம் பூத்துக்கு நிரந்தரமான பண உதவிகள் எதுவும் இல்லை, திருச்சபைகளில் போதிக்கும் வாய்ப்புகளும் குறைவாகவே கிடைத்தன.கேத்தரீன் அம்மையார்தான் மேற்கு லண்டன் மற்றும் பிற இடங்களுக்குச் சென்று பிரசங்கங்கள் செய்து, தான் எழுதிய புத்தகங்களை விற்று குடும்பத்தின் தேவைகளை சந்தித்தார். 


கேத்தரீன் அம்மையாரின் பிரசங்கங்கள் எளிமையாகவும் வல்லமை நிறைந்ததாகவும் இருந்ததால் அநேக மக்களை கிறிஸ்துவுக்கு நேராக வழிநடத்தியது.இவ்விருவரும் லண்டன் மற்றும் அண்டிய பகுதிகளுக்கும்,பிற நகரங்களுக்கும் கடந்து செல்லும் மக்களோடு துனைந்து, அவர்களது வேதனைகளை ஆறுதல் படுத்தியும், திருச்சபையில் இருந்து துன்புறுத்தப்பட்டவர்களை கரிசனையாய் விசாரித்து, சமுதாயத்தால் இழிவாக கருதப்பட்டவர்களை தேடிச்சென்றனர்.


மதுபானத்திற்கு அடிமையானவர்களின் வீடுகளில் உள்ளவர்களுக்கு நல்ல ஆலோசனைகள் வழங்கி, புதிய விசுவாசிகளின் நம்பிக்கையை பலப்படுத்துவதற்காக,அவர்கள் வீடுகளில் ஜெபக்கூட்டமும் நடத்தினார்கள்.வில்லியம் பூத் மற்றும் கேத்தரீன் பூத் தொடங்கிய இயக்கமானது சூதாட்டக்காரர்கள்,திருடர்கள், குடிகாரர்கள்,ஏமாற்றுக்காரர்கள்,போதை வஸ்துக்களுக்கு அடிமையானவர்கள், பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள், மற்றும் கிறிஸ்தவ சமூகத்தில் விரும்பத்தகாதவர்கள். சுவிசேஷபணி செய்து வந்தார்கள்.


இந்நிலையில் ஒரு சில மாதங்களில்,சுமார் 3,000 பேர் இந்த இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.1867 ஆம் ஆண்டில், இந்த இயக்கத்தில் 10 முழுநேர பணியாளர்கள் மட்டுமே இருந்த சூழ்நிலையில்,1874 ஆம் ஆண்டில் 1,000 பேர் தன்னார்வலர்களாகவும், 42 பேர் முழுநேர சுவிசேஷகர்களாகவும், கிறிஸ்டியன் மிஷன் (The Christian Mission) என்ற பெயரில் செயல் பட்டனர். 


இந்த இயக்க ஆதரவாளர்கள் எல்லோரும் வில்லியம் பூத்தை ஜெனரல் (பொது) என்றே அழைத்து வந்தார்கள். இந்நிலையில் 1878 ஆம் ஆண்டு இந்த இயக்கம் பற்றிய செய்திகளை அச்சுப்பொறியில் ஏற்றும்போது *கிறிஸ்டியன் மிஷன் தன்னார்வ சேனை (கிறிஸ்டியன் மிஷன் தன்னார்வ சேனை)* என்று இருந்ததை கவனித்து, அதில் *தன்னார்வ சேனை* என்ற வார்த்தைக்கு பதிலாக இரட்சண்ய சேனை (சால்வேஷன் ஆர்மி) என்று திருத்தம் செய்தார். இந்த தலைப்பு எல்லோருக்கும் பிடித்துப்போகவே The Christian Mission என்ற இயக்கமானது The Salvation Army என்ற பெயர்மாற்றம் அடைந்தது. இதிலிருந்து இந்த இயக்கத்தில் சேரும் விசுவாசிகள் கிறிஸ்துவின் சேனை வீரர்கள் என்று அழைக்கப்பட்டனர். 


இரட்சண்ய சேனையில் பெண்கள்:


 கேத்தரின் பூத் தனது கணவர் வில்லியம் பூத்துடன் இணைந்து The Salvation Army என்ற ஸ்தாபனத்தின் இணை நிறுவனராக இருந்தார். கேத்தரீன் அம்மையார் தான் இந்த புதிய ஸ்தாபனத்தின் கொடியை வடிவமைத்து, ஊழியர்களுக்கான அதிகாரப் பிரிவுகள்(ரேங்க்) ஏற்படுத்தி, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சீருடைகள் வடிவமைத்தார்கள். 


இரட்சண்ய சேனையின் கோட்பாடுகள்:-


ஒரு மனிதனின் ஆத்துமா இரட்சிப்பு அடைவதற்கு சாக்கிரமென்று ஞானஸ்நானம் மற்றும் திருவிருந்து ஆகியவை அவசியமில்லை என்று கேத்தரின் நம்பினார். மற்றபடி இரட்சண்ய சேனை திருச்சபை கோட்பாடுகள் பெரும்பாலானவை சீர்திருத்த திருச்சபையின் அடிப்படைக் கோட்பாடுகளைத்தான் பின்பற்றுகின்றன. திருச்சபைக்குள் புதிய விசுவாசிகளை கொண்டுவரும் பெண்கள் ஒரு முக்கிய கருவியாக இருப்பார்கள் என்று கேத்தரீன் அம்மையார் நம்பினார்கள். ஆகவே திருச்சபை பணிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யும் பெண்களை தேர்வு செய்ய ஊழிய ஆர்வமும் வேலை செய்யும் மனப்பான்மை கொண்ட பெண்களை தேர்வு செய்தார். இவர்கள் அல்லேலுயா லஸ்ஸீஸ் என்று அழைக்கப்பட்டார்கள்.


இந்த பெண்கள் சமூகத்தால் ஒதுக்கப்பட்டு, சேரிகளில் வசிக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் சேவைசெய்து அவர்களுக்கு சமூக பாதுகாப்பு கிடைக்கும்படி செய்தார். ஊழியத்தில் ஆண் பெண் பாலின சமத்துவம் கடைபிடிக்கப்பட்டதால் ஆண்களுக்கு நிகராக பெண்களும் சம உரிமை பெற்றனர்.1878 இல், திருச்சபை ஊழியத்தில் 91 பேர்களில் 41 பேர் பெண்களாக இருந்தனர்.வில்லியம் பூத் தனது புத்தகத்தில் குறிப்பிடப்பட்டபோது எனது இராணுவத்தின் சிறந்த ஆண்கள், பெண்கள் என்று எழுதியுள்ளார்.


திருச்சபை ஊழியத்தில் பெண்களுக்கு எதிர்ப்பு:


ஆங்கிலிக்கன் திருச்சபையான சர்ச் ஆஃப் இங்கிலாந்து (சர்ச் ஆஃப் இங்கிலாந்து) முதன் முதலில் சால்வேஷன் ஆர்மி ஸ்தாபனத்தின்மீது கடும் வெறுப்பை கான்பித்தது. எப்படியெனில் இங்கிலாந்தின் முன்னணி அரசியல்வாதியும் சுவிசேஷகருமான லார்ட் ஷாஃப்ட்ஸ்பரி (Lord Shaftesbury) என்பவர் வில்லியம் பூத்தை அந்திகிறிஸ்து என்று வர்ணித்தார். இதற்கு முக்கியமான புகார்களில் ஒன்று, திருச்சபையில்,பெண்களை ஆண்களின் நிலைக்கு உயர்த்தியது. 



இதற்காக சால்வேஷன் ஆர்மியின் தன்னார்வத் தொண்டர்கள் அடிக்கடி துன்புறுத்தப்பட்டனர். பல சமயங்களில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பொது இடங்களில் தாக்கப்பட்டனர். சால்வேஷன் ஆர்மி தன்னார்வ தொண்டர்கள் வீதிகளில் இசைக்கருவிகளுடன் பாடல்களை பாடிக்கொண்டு மக்களை தங்கள் வெளிப்புற கூடாரக் கூட்டங்களுக்கு அழைக்கும்போது இங்கிலாந்தின் பல பகுதிகளில் தாக்குதலுக்கு உள்ளானார்கள். பல நேரங்களில் சமூக விரோத கும்பல்கள் இவர்களை கிண்டல் செய்து, அறுவருப்பான வார்த்தைகளை பேசி மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தினார்கள். இப்படிப்பட்ட வன்முறை மற்றும் துன்புறுத்தல்கள் மத்தியிலும் 1881 மற்றும் 1885 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் 2,50,000 மக்கள் சால்வேஷன் ஆர்மி திருச்சபைகளில் அங்கத்தினர்களாக சேர்ந்தனர்.


கேத்தரீன் அம்மையாரின் சமூகப் பணிகள்:


கேத்தரின் அம்மையாரின் முக்கியமான நோக்கமானது பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை மீட்டெடுத்து அவர்களின் மறுவாழ்வுக்காக அரசாங்கத்தின் கதவை தட்டினார். இங்கிலாந்து தேசத்தில் துணி நெய்யும் நிருவனங்களில், பணி புரியும் பெண்களுக்கு ஆண்களைவிட மிகக்குறைவாகவே ஊதியம் வழங்கப்படும் நிலையைக் கண்டு மனம் வெதும்பினார். இவர்களின் சம்பள உயர்வுக்காக அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல போராட்டங்களை நடத்தினார்.  


குடிகார தந்தையால் வழிநடத்தப்படும் குடும்பத்தில் உள்ள பிள்ளைகளை ஆதரிப்பதற்காக மக்களின் உதவிகேட்டி மன்றாடினார். குடிபழக்கத்துக்கு அடிமையான மக்களின் வீடுகளுக்குச் சென்று, அவர்களுக்கு நல்ல ஆலோசனைகள் வழங்கினார், அவர்களை மனந்திரும்பினார். பாலியல் தொழில் செய்பவர்கள், குற்றமிழைத்த பெண்கள், குடிகாரர்கள் மற்றும் வீடற்றவர்களின் சூழ்நிலைகளைக் கண்டு, ஏழைகள் மலிவான விலையில் உணவை வாங்கக்கூடிய அளவிற்கு உணவு விடுதியாளர்களிடம்பேசி பல கடைகள் திறந்து ஏழைமக்களுக்கு உதவி செய்தார். இவரது ஊழியம் பலரை ஈர்த்ததால் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள், ஆதரவற்ற நிலையில் இருக்கும் குடிசைவாசிகளின் மேம்பாட்டிற்கு தாராளமாக உதவி செய்தார்கள். குழந்தை விபச்சாரத்திற்கு எதிராக இளம் பெண்களைப் பாதுகாப்பதற்காக இங்கிலாந்து ராணியான விக்டோரியாவை சந்தித்து வேண்டிக்கொண்டதினால் 1885 இல் இங்கிலாந்து அரசாங்கத்தால் இளம் பெண்கள் பாதுகாப்பிற்கான பாராளுமன்ற மசோதா நிறைவேற்றப்பட்டது. 


வெளிநாடுகளில் சால்வேஷன் ஆர்மி:


 சால்வேஷன் ஆர்மி திருச்சபைகளின் வளர்ச்சியானது இங்கிலாந்து மீழுவதும் வேகமாக பரவி, பின்னர் சர்வதேச அளவில் விரிவடைந்தது. இதற்காக கேத்தரின் தம்பதியினர் தங்கள் எட்டு பிள்ளைகளையும் ஊழியத்திற்கு அனுப்பி வைத்தார். இவர்களில் பிராம்வெல் மற்றும் எவாஞ்சலின் ஆகியோர் தி சால்வேஷன் ஆர்மியின் ஜெனரல்கள் ஆனார்கள். அப்படியே கேட் பூத் என்ற மகள் பிரான்சு நாட்டிற்கு முதல் மிஷனரியாக சென்றார். பின்னர் சுவிட்சர்லாந்திலும் சால்வேஷன் ஆர்மி திருச்சபைகள் நிறுவப்பட முன்னோடியாக இறந்தார்.கேத்தரீன் அம்மையார் அமெரிக்காவில் சால்வேஷன் ஆர்மியின் பணியைத் தொடங்க முடிவு செய்தபோது, ​​ஏழு பெண்களைக் கொண்ட ஸ்பிளெண்டிட் செவன் (ஸ்பிளெண்டிட் செவன்) குழு அனுப்பி வைக்கப்பட்டது.பின்னர் ஐரோப்பிய நாடுகள் எங்கும் பரவியது.


கேத்தரீன் அம்மையாரின் மரணம்:


அறுபது வயதை கடந்த கேத்தரீன் அம்மையாரை கடுமையான புற்றுநோய் வாட்டிவதைக்க ஆரம்பித்ததில் வில்லியம் பூத்து நொறுங்கி போய்விட்டார். ஏனெனில் கேத்தரீன் தான் அவரது ஆலோசனை அதிகாரியாகவும், சால்வேஷன் ஆர்மி ஸ்தாபனத்தின் வலது கையாகவும் இருந்தார். திறமையான பேச்சாற்றல் மற்றும் கூர்மையான அறிவுத்திறன் கொண்ட வாழ்க்கை துணையை இழக்கபோகிறோம் என்ற சிந்தனை வாட்டியெடுத்தது.சால்வேஷன் ஆர்மியின் இருபத்தைந்தாவது ஆண்டு விழாவில் அம்மையாரால் கலந்து கொள்ள முடியாததால் தன்னுடைய செய்தியை ஒரு கடிதத்தில் தெரிவித்திருந்தார்கள். அதில்: “என் அன்பான குழந்தைகளே மற்றும் நண்பர்களே, என் இடம் காலியாக உள்ளது, ஆனால் என் இதயம் உங்களிடம் உள்ளது. நீங்கள் தான் என்னுடைய மகிழ்ச்சி மற்றும் கிரீடம். இந்த இருபத்தைந்து பல ஆண்டுகளாக உங்கள் பாடல்கள், துன்பங்கள் மற்றும் வெற்றிகள் என் வாழ்வின் முக்கிய பக்கபலமாக இருந்தது. நான் இரட்சண்ய சேனை கொடியின் கீழ் இறந்து கொண்டிருக்கிறேன், ஆனால் இதன் கீழ் நின்று இனி நீங்கள் வாழ்வதும், போராடுவதும், உங்களுடையது. இந்த வாழ்க்கை புயலில் கடவுள் எனக்கு இரட்சிப்பும் அடைக்கலமுமாக இருந்துகொண்டு இருக்கின்றார். நான் உங்களுக்கு என் அன்பையும் ஆசீர்வாதத்தையும் விட்டுச்செல்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.இந்நிலையில் அக்டோபர் 4, 1890 இல், கேத்தரின் பூத், தனது 61 வயதில், தனது கணவர் வில்லியம் பூத் கரங்களில் முத்தமிட்டு தன்னைச் சுற்றியிருந்த சால்வேஷன் ஆர்மி குடும்பத்தாரை ஏறிக்கொண்டு, ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு, தன் கண்களை மூடிக்கொண்டார். இதன் பின் அம்மையார் கண் திறக்கவே இல்லை. கேத்தரீன் அம்மையாரின் சரீரம் ஒரு கண்ணாடி சவப்பெட்டியில் வைக்கப்பட்டு இருந்தது, சுமார் 40,000 பேர் இறுதி மரியாதை செலுத்தி கண்ணீரோடு பிரியாவிடை பெற்றனர். இந்த வாழ்க்கை புயலில் கடவுள் எனக்கு இரட்சிப்பும் அடைக்கலமுமாக இருந்துகொண்டு இருக்கின்றார். நான் உங்களுக்கு என் அன்பையும் ஆசீர்வாதத்தையும் விட்டுச்செல்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.இந்நிலையில் அக்டோபர் 4, 1890 இல், கேத்தரின் பூத், தனது 61 வயதில், தனது கணவர் வில்லியம் பூத் கரங்களில் முத்தமிட்டு தன்னைச் சுற்றியிருந்த சால்வேஷன் ஆர்மி குடும்பத்தாரை ஏறிக்கொண்டு, ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு, தன் கண்களை மூடிக்கொண்டார். இதன் பின் அம்மையார் கண் திறக்கவே இல்லை. கேத்தரீன் அம்மையாரின் சரீரம் ஒரு கண்ணாடி சவப்பெட்டியில் வைக்கப்பட்டு இருந்தது, சுமார் 40,000 பேர் இறுதி மரியாதை செலுத்தி கண்ணீரோடு பிரியாவிடை பெற்றனர். இந்த வாழ்க்கை புயலில் கடவுள் எனக்கு இரட்சிப்பும் அடைக்கலமுமாக இருந்துகொண்டு இருக்கின்றார். நான் உங்களுக்கு என் அன்பையும் ஆசீர்வாதத்தையும் விட்டுச்செல்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.இந்நிலையில் அக்டோபர் 4, 1890 இல், கேத்தரின் பூத், தனது 61 வயதில், தனது கணவர் வில்லியம் பூத் கரங்களில் முத்தமிட்டு தன்னைச் சுற்றியிருந்த சால்வேஷன் ஆர்மி குடும்பத்தாரை ஏறிக்கொண்டு, ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு, தன் கண்களை மூடிக்கொண்டார். இதன் பின் அம்மையார் கண் திறக்கவே இல்லை. கேத்தரீன் அம்மையாரின் சரீரம் ஒரு கண்ணாடி சவப்பெட்டியில் வைக்கப்பட்டு இருந்தது, சுமார் 40,000 பேர் இறுதி மரியாதை செலுத்தி கண்ணீரோடு பிரியாவிடை பெற்றனர். தனது கணவர் வில்லியம் பூத் கரங்களில் முத்தமிட்டு தன்னைச் சுற்றியிருந்த சால்வேஷன் ஆர்மி குடும்பத்தாரை ஏரெடுத்துப்பார்த்து, ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு, தன் கண்களை மூடிக்கொண்டார். இதன் பின் அம்மையார் கண் திறக்கவே இல்லை. கேத்தரீன் அம்மையாரின் சரீரம் ஒரு கண்ணாடி சவப்பெட்டியில் வைக்கப்பட்டு இருந்தது, சுமார் 40,000 பேர் இறுதி மரியாதை செலுத்தி கண்ணீரோடு பிரியாவிடை பெற்றனர். தனது கணவர் வில்லியம் பூத் கரங்களில் முத்தமிட்டு தன்னைச் சுற்றியிருந்த சால்வேஷன் ஆர்மி குடும்பத்தாரை ஏரெடுத்துப்பார்த்து, ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு, தன் கண்களை மூடிக்கொண்டார். இதன் பின் அம்மையார் கண் திறக்கவே இல்லை. கேத்தரீன் அம்மையாரின் சரீரம் ஒரு கண்ணாடி சவப்பெட்டியில் வைக்கப்பட்டு இருந்தது, சுமார் 40,000 பேர் இறுதி மரியாதை செலுத்தி கண்ணீரோடு பிரியாவிடை பெற்றனர்.


கேத்தரீன் அம்மையாரின் புகழ்:


 கேத்தரின் பூத் அம்மையார்,திருச்சபை மற்றும் சமூக சீர்திருத்தவாதியாக இருந்து,தனக்கு தெரிந்த உண்மையை தைரியமாக பேசத் துணிந்தவர். அம்மையார் தன் இதயத்தால் சமுதாயத்தில் இழிவாக கருதப்பட்டவர்கள் மனப்பூர்வமாக நேசித்தார்கள்,அவர்களைத் தன் கைகளால் ஏற்றுக்கொண்டார். திருச்சபையாலும் சமூகத்தாலும் புறக்கணிக்கப்பட்ட ஏழைகள்,பெண்கள் மற்றும் ஆதரவற்றோர் மத்தியில் சமூகப் பணி, பெண்கள் மறுவாழ்வு, மதுவிலக்கு, பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு சட்டம், போன்ற பல்வேறு விஷயங்களில் உறுதியான போராட்டங்களை முன்னெடுத்தவர். 


திருச்சபை ஊழியத்தில் ஆண்களுடன் பெண்களுக்கும் முழு சமத்துவம் இருக்க வேண்டும் என்று கடைசி மூச்சு நிற்கும்வரை போராடினார்.கேத்தரின் அம்மையார் வாழ்ந்த காலத்தில், அவரது கணவர் வில்லியம் பூத் உட்பட எவரும் அம்மையாரைப்போல சமுதாயப் புகழின் உச்சத்தையோ அல்லது ஆன்மிக நிலையின் உச்சத்தையோ தொடமுடியவில்லை என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள். சால்வேஷன் ஆர்மியின் தாய் என்று அழைக்கப்படும் கேத்தரின் பூத் அம்மையார் இங்கிலாந்து ராணி விக்டோரியா சகாப்தத்தின் மிகவும் அசாதாரணமான பெண்களில் ஒருவர் என்ற சரித்திரம் இன்றும் பேசிக்கொண்டு இருக்கிறது.


இந்த 21 ஆம் ஆண்டுகளில் சால்வேஷன் ஆர்மி (இரட்சண்ய சேனை) ஸ்தாபனமானது 130க்கும் மேற்பட்ட நாடுகளில் 30 இலட்சம் அங்கத்தினர்கள் நற்செய்திபணியை பிரசங்கித்து திருச்சபைகளை நாட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.மேலும் நான்கு சுவிசேஷ மையங்கள்,சமூக நல நிறுவனங்கள், மருத்துவமனைகள்,பள்ளிகள் மற்றும் பிற சமூக சேவைகள் சர்வதேச அளவில் நடத்தப்படுகிறது. குறிப்பிடத்தக்கதாகும். இதற்கு அஸ்திபாரம் போட்டது கேத்தரீன் பூத் அம்மையார் ஆவார்.




Post a Comment

0 Comments