அறிந்து கொள்வோம்
பகுதி-10
புதிய ஏற்பாட்டின் பிரகாரம் சுவிசேஷ ஊழியம்
1. சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணுங்கள்.
2. சுவிசேஷத்தை உறுதிபண்ணுங்கள்
யாருக்கு பிரசங்கம் பண்ண வேண்டும்
1. தரித்திரருக்கு (லூக்கா 4:18; லூக்கா 7:22)
2. சாத்தானிடம் சிறைப்பட்டவர்களுக்கு
(லூக்கா 4:18)
3. யூதர்களுக்கு (அப் 11:19-20)
4. புறஜாதியாருக்கு
(கலா 2:2; எபே 3:8)
5. புறஜாதியாருக்கு (கலா 1:16)
6. பூமியில் வாசம்பண்ணுவோருக்கு
(வெளி 14:6)
7. சர்வ சிருஷ்டிக்கும்
(மாற்கு 16:15)
பிரசங்கம் பண்ண வேண்டிய இடங்கள்
1. உலகம் முழுவதும் (மத் 24:14; மாற்கு 16)
2. எல்லா இடங்களிலும் (அப் 8:4)
3. பட்டணங்களில்
(மத் 11.1; அப் 8:40)
4. ஊர்களில் (மாற்கு 1:38)
5. ஜெப ஆலயங்களில் (மாற்கு 1:39; லூக்கா 4:44)
6. வீட்டின் மேற்கூரையில்
(மத் 10:27)
7. அற்பமான இடங்கள்
(2கொரி 10:16)
சுவிசேஷத்தை எப்படிப் பிரசங்கிக்க வேண்டும். எப்படிப் பிரசங்கிக்கக்கூடாது
1.பொறாமையினாலும்,விரோதத்தினாலும் பிரசங்கிக்க கூடாது. அன்பினாலும் நல்மனதினாலும் பிரசங்கிக்க வேண்டும்.
(பிலி 1:15-17)
2. வஞ்சகத்தினால் பிரசங்கிக்கக்கூடாது. உண்மையினால் பிரசங்கிக்க வேண்டும். (பிலி 1:18)
3. சிறந்த வசனிப்பினாலோ, மனுஷ ஞானத்தினாலோ பிரசங்கிக்கக்கூடாது. தேவனுடைய வல்லமையினால் பிரசங்கிக்க வேண்டும். (1கொரி 2:1-5)
4. மனுஷரைப் பிரியப்படுத்தும் விதமாக பிரசங்கிக்கக்கூடாது. தைரியமாகவும், சத்தியத்தின் மீதுள்ள வைராக்கியமாகவும் பிரசங்கம் பண்ண வேண்டும்.
(பிலி 1:14; அப் 9:27)
5. சந்தேகத்தோடும், அவிசுவாசத்தோடும் பிரசங்கிக்கக்கூடாது. விசுவாசத்தோடு பிரசங்கிக்க வேண்டும். (1தீமோ 4:6-16; 1பேதுரு 5:1-10)
6. மனுஷருக்குப் பட்சபாதமாக பிரசங்கிக்கக் கூடாது. தேவனுடைய ஊழியக்காரராகப் பிரசங்கிக்க வேண்டும். (மத் 22:16; எபே 6:6; கலா 1:10)
7. சுவிசேஷத்தை அரைகுறையாகப் பிரசங்கிக்கக்கூடாது. பூரண சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டும். (ரோமர் 15:19,29)
நாம் பிரசங்கிக்கக்கூடாத காரியங்கள்
1. விருத்தசேதனம் (கலா 5:11)
2. மோசேயின் பிரமாணம்
(அப் 15:21)
3. சுயம் (2கொரி 4:5)
4. வேறு சுவிசேஷம் (கலா 1:8-9)
5. வேறே இயேசு (2கொரி 11:4)
நாம் பிரசங்கிக்க வேண்டிய காரியங்கள்
1. நற்செய்தி (ஏசா 61:1; லூக்கா 4:18)
2. பரலோக ராஜ்யம் (மத் 4:17; மத் 9:35; மத் 10:7; மத் 24:14; மாற்கு 1:14)
3. தேவனுடைய ராஜ்யம் (லூக்கா 4:43; லூக்கா 9:2,60; லூக்கா 16:16; அப் 8:12; அப் 20:25; அப் 28:31)
4. மனந்திரும்புதல் (மத் 3:1-2; லூக்கா 24:47)
5. தண்ணீர் ஞானஸ்நானம் (மாற்கு 1:4; லூக்கா 3:3)
6. ஆவியானவரின் அபிஷேகம் (மாற்கு 1:7-8; லூக்கா 3:16)
7. சுவிசேஷம் (மத் 11:5; லூக்கா 4:18)
8. சமாதானத்தின் சுவிசேஷம் (ரோமர் 10:15)
9. கிறிஸ்துவின் சுவிசேஷம் (ரோமர் 15:19)
10. தேவனுடைய சுவிசேஷம் (ரோமர் 1:1; 2கொரி 11:7; 1தெச 2:9)
11. நித்திய சுவிசேஷம் (வெளி 14:6)
12. வார்த்தை (மாற்கு 2:2; அப் 8:4,25; அப் 14:25; அப் 15:36; அப் 16:6; 2தீமோ 4:2; எபி 4:2)
13. விசுவாச வார்த்தை (ரோமர் 10:8-17)
14. தேவனுடைய வார்த்தை (அப் 13:5; அப் 17:13)
15. கர்த்தருடைய வார்த்தை (அப் 15:35)
16. இயேசு கிறிஸ்து (அப் 3:20; அப் 5:42; அப் 8:5,35; அப் 9:20; அப் 10:42-43; அப் 17:3,18; 2கொரி 1:19; 2கொரி 4:5;கலா 1:16)
17. சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்து (1 கொரி 1:23; 1 கொரி 2:2)
18. சிலுவை (1 கொரி 1:18,21)
19. கர்த்தருடைய அநுக்கிரக வருஷம் (லூக்கா 4:18; ஏசா 61:1-2)
20. கிறிஸ்துவினுடைய அளவற்ற ஐசுவரியம் (எபே 3:8)
21. மீட்பு (லூக்கா 4:18; ஏசா 61:1)
22. ஒப்புரவாகுதல் (அப் 14:15; 2 கொரி 5:14-21)
23. கிறிஸ்து சரீரப்பிரகாரமாக உயிர்த்தெழுதல் (1 கொரி 15:12)
24. நீதி (சங் 40:9; 2 பேதுரு 2:5)
25. பாவங்களின் மன்னிப்பு (அப் 13:38)
26. மரித்தோரின் உயிர்த்தெழுதல் (அப் 4:2)
27. சமாதானம் (அப் 10:36; எபே 2:17)
28. தேவனுக்குப் புறம்பே எல்லாம் மாயை (பிர 12:8-14)
29. தேவ பக்திக்குரிய இரகசியம் (1தீமோ 3:16)
30. விசுவாசத்தினால் நீதிமானாகுதல் (கலா 3:8)
0 Comments