நமக்கு நியமிக்கப்பட்டிருக்கும் பாதை -Daily Devotion

 Daily Devotion


நமக்கு நியமிக்கப்பட்டிருக்கும் பாதை


பிலிப்பியர் 2:15

கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்றபிள்ளைகளுமா இருக்கும்படிக்கு,



மற்ற மனிதர்கள் செய்யும் தவறுகளில் நாம் இடறலடையாதபடிக்கு நம் சமாதானத்தைக் காத்துக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, நெடுஞ்சாலை விதிகளை கடைப்பிடிக்காமல் ஒரு வாலிபன் தான் நினைத்தபடி வாகனத்தை ஓட்டிச் சென்று கொண்டிருந்தான். அறிமுகம் இல்லா ஒருவன் அவனுக்கு பலமுறை புத்திமதி கூறியும் அதை அவன் பொருட்படுத்தாமல், முன்பு செய்தது போல செய்து வந்தான். அந்த வாலிபனின் நிலையை கண்ட அந்த மனிதன் குழப்பமடைந்தான் மனம் சலித்து வேதனை கொண்டான்,


இந்த சம்பவத்தில் அந்த வாலிபனே குற்றம் செய்து திரிகின்றான், ஆனால் அந்த வாலிபனின் செயல்களினால் குற்றம் செய்யாத அந்த மனிதன் தான் தன் சமாதானத்தை கெடுத்துக் கொண்டான். 

இந்த சம்பவத்தை நம் வாழ்க்கையோடு இணைத்து சிந்தித்துப் பார்ப்போம். சபையிலுள்ள மனிதன் ஒருவன் தேவனுக்கு எதிரான காரியம் ஒன்றை செய்து விட்டான். அது தவறு என்று அறிந்தும், ஆலோசனைகளை தள்ளிவிட்டு, மனந்திரும்ப மனதில்லாமல் தான் செய்வதை துணிகரமாக செய்து வந்தான். தனக்கும் தேவனுக்கும் இடையிலுள்ள உறவை அவன் உடைத்துப் போடுவதால், அந்த மனிதன் தன் ஆத்துமாவிற்கு

 கேடு விளைவித்துக் கொள்கின்றான்,

அந்த மனிதனின் வாழ்வைப் பார்த்து நாம் இடறல் அடைந்து போகக் கூடாது. மோசே என்னும் தேவ ஊழியர், எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்களை அழைத்து சென்ற போது, அவர்கள் மத்தியிலும் கலகக்காரர்கள் இருந்தார்கள். அவர்கள் எப்பொழுதும் வழுவிப்போகின்ற இருதயமுடையவர்களாக இருந்தார்கள். 


ஆனாலும் காலேப்பு, யோசுவா போன்ற மனிதர்கள் தங்கள் இலக்கின் மேல் தங்கள் கண்களை பதிய வைத்திருந்தார்கள். பல்லாயிரக்கணக்கான ஜனங்கள் கலகம் செய்த போதும் அவர்கள் இடறலடையவில்லை. 

தேவனையே நம்பி இருந்தார்கள். அதுபோல, நாமும் நம் கண்களை இயேசுவின் மேல் பதிய வைக்க வேண்டும். 

நமக்கு நியமித்திருக்கிற பாதையில் பொறுமையோடே ஓடக்கடவோம்;. ஒரு வேளை பலர் வழி விலகி போனாலும் அதை குறித்த நம் இடறல் அடையமால் நாம் மாசற்றவர்களாக, தேவ சித்தத்தை நிறைவேற்றுகிற பாதையில் நமக்கு நியமிக்கப்பட்டிருக்கும் பாதையில் சாாியாய் ஒடக்காடவோம் .ஆமேன்….



Post a Comment

0 Comments