சிலுவை வரலாறு
பகுதி -2
1. சிலுவையும் காடியும் :
சிலுவையில் அறையப்பட்ட இயேசுவுக்குக் காடி கொடுக்கப்பட்டது என்பது நமக்கு தெரியும். ஆனால், எத்தனை முறை கொடுக்கப்பட்டது? எப்போது கொடுக்கப்பட்டது? எப்படி கொடுக்கப்பட்டது என்கிற குழப்பம் அநேகருக்கு உண்டு. இயேசுவுக்கு மூன்று முறை காடி கொடுக்கப்பட்டதாக வேதம் விவரிக்கின்றது. அதைத் தெரிந்துக்கொள்வோம்.
1. மாற் 15:23
சிலுவையில் அறைவதற்க்கு முன்:
முக்கிய குறிப்பு: வெள்ளிப்போளம் கலந்த திராட்சைரசமான இது வலியை மறக்கக் கொடுக்கப்படும் பாணம். ஆனால், கிறிஸ்துவோ முழு வேதனையையும் சகிக்கும்படி அதனை ஏற்க்கவில்லை.
2.லூக் 23:36 :
சிலுவையில் மத்தியானத்திற்கு முன்:
முக்கிய குறிப்பு: இது படைவீரர்கள் கிறிஸ்துவை ராஜா என எள்ளி நகையாடி கொடுத்தது. அக்காலத்தில் அரசர்கள் பதவி ஏற்றவுடன் மரியாதை நிமித்தம் இனிய பானம் வழங்குவதைப்போல இயேசுவுக்குக் கொடுத்து, நீ யூதரின் ராஜாவானால் இரட்சித்தக்கொள் என்று கிண்டல் செய்தனர் (லூக் 23:36).
சிலுவையின் இரண்டாவது வாரத்தைக்கு முன்பு இது நிகழ்ந்தது (லூக் 23:43). அதன் பின்பு பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை அந்தகாரம் உண்டானது (மாற் 15:33).
3.யோவா 19:29,30 -மாற் 15:36.
சிலுவையில் மத்தியானத்திற்குப் பின்:
முக்கிய குறிப்பு: சங் 69:21; 22:15 போன்ற வேத வசனங்களின் நிறைவேறுதலாக இயேசு கூறியபோது, பஞ்சில் தோய்த்து, ஈசோப்புத்தண்டில் மாட்டிக்கொடுத்தனர். கிறிஸ்து அதை சுவைத்தப்பின் முடிந்தது என்றார். சிலுவையில் நான்காவது வார்த்தைக்குப் பிறகு (மாற் 15:34). ஐந்தாவது வார்த்தையைத் தொடர்ந்தும் இது நிகழ்ந்தது.
2.ஒரே நாளில் நிறைவேறிய சிலுவைக்கான தீர்க்கதரிசனங்கள்:
1.மத் 10:4; 26:49,50
சக 11:12,13
முப்பது வெள்ளிக்காசுக்கு விற்கப்படுவார்.
2.மத் 26:15
சக 11:13
அந்தக் காசு தேவாலயத்தில் எறியப்படும்
3.மத் 27:5
சக 11:13
அந்தக்காசினால் குயவன் நிலத்தை வாங்குவர்கள்.
4.மத் 27:7
சக 13:7.
சீடர்களால் கைவிடப்படுவார்
5.மாற் 14:50,
சங் 35:11,மத் 26:59,60.
பொய்க் குற்றம் சாட்டப்படுவார்
6. ஏசா 53:7,மத் 27:12.
குற்றம் சாட்டப்படும்போது காயப்படுத்தோர் முன்
மௌனமாக இருப்பார்.
7.ஏசா 53:5,யோவா 20:25.
காயப்படுத்தப்படுவார்
8.ஏசா 50:6
அடிக்கப்படுவார். துப்பப்படுவார்
9.மத் 26:67
மீகா 5:1
கன்னத்தில் அடிக்கப்படுவார்
10.மாற் 14:65
சங் 22:7,8
பரியாசம் பண்ணப்படுவார்
11.மத் 27:31
சங் 109:24,25
மிகவும் தள்ளாடுவார்.
12.யோவா 19:17; லூக் 23
சங் 22:16; சக 12:10
கரங்கள் துளைக்கப்படும்
13.லூக் 23:33
ஏசா 53:12
அக்கிரமக்காரருடன் தீர்ப்பிடப்படுவார் அக்கிரமக்காரருக்காகவும் வேண்டுதல் செய்வார்
14.மத் 27:38 லூக் 23:34
ஏசா 53:3
சொந்த மக்களால் கைவிடப்படுவார்
15.யோவா 7:5,48
சங் 69:4
காரணமின்றி பகைக்கப்படுவார்
16.யோவா 15:25
சங் 38:11
நண்பர் தூரமாவர்
17.லூக் 23:49
சங் 109:25
மக்கள் தலைகளைத் துலுக்குவர்
18.மத் 27:39
சங் 22:17
அவர்கள் இயேசுவை நோக்கிப் பார்த்துக் கொண்டிருப்பர்
19.லூக் 23:34,யோவா 19:23,2.
சங் 22:15
உடைக்காக சீட்டிடுவர்
20.சங் 69:21, யோவான் 19:28-29.
தாகமாயிருப்பார்
21.யோவா 19:28,29,
சங் 69:21,மத் 27:34
காடியைக் குடிக்கக் கொடுப்பர்
22.சங் 22:1
அவரது கதறல் கேட்கப்படவில்லை
23.மத் 27:46-50
சங் 31:5
பிதாவினிடத்தில் தனது ஆவியை ஒப்படைப்பார்
24.லூக் 23:46
சங் 34:20
எலும்புகள் முறிக்கப்படாது
25.யோவா 19:33
சங் 22:14
இருதயம் உடைந்தவராவார்
26.யோவா 19:34
சக 12:10
குத்தப்படுவார்
27.லூக்கா 23:44-45
ஆமோ 8:9
அந்தகாரம் தோன்றும்
28.மத் 27:57-60
ஏசா 53:9
ஐசுவரியவானாக அடக்கம் பண்ணப்படுவார்…
3.சிலுவையும் சில அடையாளங்களும்:
ரோமன் கத்தோலிக்கச் சபையினர் தாங்கள் கிறிஸ்தவ பக்தியுள்ளவர்கள் என்பதைக் காண்பிப்பதற்க்காக தந்தை, மகன், தூய ஆவியானவர் என்றுச் சொல்லி கண், மார்பு, தோல்பட்டைகளைத் தொட்டு சிலுவையின் அடையாளத்தைப் போட்டுக் கொள்வார்கள்.
இதில் தந்தை என்றால் பிதாவையும், மகன் என்றால் இயேசுவையும், தூய ஆவி என்றால் பரிசுத்த ஆவியானவர் என்றும் அர்த்தமாகும். அது போல, கண் என்றால் ஆவியையும், மார்பு என்றால் ஆத்துமாவையும், தோல்பட்டை என்றால் சரீரத்தையும் குறிப்பிடுவதாகச் சொல்லுவார்கள். இது அவர்களுக்கென்று, அவர்களே உருவாக்கிக் கொண்ட அடையாளமாகும்
நாம் படிக்கும் கல்வி பாடத்தில் கூட பலவிதங்களிலும் சிலுவையோ அல்லது சிலுவையின் அடையாளமோ பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
1. ரோமன் இலக்கம் 10 என்பது “ X " ஆகும்.
2. இலத்தின் அகர வரிசையில் " X " என்ற எழுத்தும் "t" என்ற எழுத்தும் சிலுவையைக் குறிக்கும்.
3. ஹன் என்ற எழுத்தில் 10 என்பது “ † ” ஆகும்.
4. கூட்டல் அடையாளத்திற்கு " + " ஆகும்.
5. பெருக்கல் அடையாளத்திற்கு “ X ” ஆகும்.
6. பிழை என்பதை குறிக்கவும் "X" ஆகும்.
இப்படி அனுதின வாழ்கையில் ஏதோ ஒரு வகையில் சிலுவை நம்மோடுகூட கலந்து நிற்கிறது.
சங்கீத புஸ்தகத்தில் வரும் 22 ம் சங்கீதம் இயேசுவின் சிலுவையையும், சிலுவையின் பாடுகளையும் குறிப்பிடும் ஓர் சங்கீதமாக உள்ளது. 6,14,15,18 ஆகிய வசனங்களே இதற்கு ஆதாரம். ஆதலால் 22 ம் சங்கீதம் இயேசுவின் சிலுவையின் அடையாளமாகும்.
ஏசாயாவின் புஸ்தகம் 53ம் அதிகாரமும் இயேசுவின் சிலுவையை படம்பிடித்து காண்பிப்பதைபோல் எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக 9 மற்றும் 10 ஆகிய வசனங்கள் இயேசு சிலுவையில் சந்தித்த, சகித்த தூன்பங்களை தெளிவாக விவரிக்கின்றது. இதன் மூலம் தீர்க்கதரிசனங்களும், தீர்க்கதரிசிகளும் சிலுவையைத் தவிர்க்க முடியாது என்பதைக் காட்டுகினறது. ஆதலால், ஏசாயா 53ம் அதிகாரமும் ஓர் ஆடையாளம் தான்.
சிரேனே என்ற ஊரைச் சேர்ந்தவனும், அலெக்சந்தர் மற்றும் சூப் என்னும் இரண்டு பிள்ளைகளுக்குத் தகப்பனுமாகிய சீமோன் என்பவன் மீது, போர்வீர்கள் அந்த பாரமான சிலுவையை வைத்தார்கள் (லூக் 23:26]. தேசாதிபதியின் அரண்மணையின் வெளியில் இருந்து, ஏறத்தால கபாலஸ்தலம் என்ற இடம் வரைக்கும் இந்த சீமோன் சிலுவையைச் சுமந்திருக்கலாம் (மாற் 15:16,21). ஆதலால், இயேசுவின் சிலுவையின் அடையாளங்களில், தவிர்க்க முடியாத அடையாளமாக சீமோன் மாறிவிட்டான்.
கிறிஸ்தவக் கொடி :
வட அமெரிக்கா, ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய இடங்களில் உள்ள சீர்திருத்த திருச்சபைகளின் மூலம் இந்த கொடி உருவாக்கப்பட்டது. இந்த கொடியின் பின்புறம் வெள்ளை நிறமும், இடப்புறத்தில் நீள நிறமும், அதன் உள்ளே சிகப்பு நிறமும் காணப்படும்வன்னம் வரையப்பட்டுள்ளது. இதில் சிவப்பு நிறம் இயேசுவின் இரத்தத்தையும், நீளநிறம் ஞானஸ்நானத்தையும் மற்றும் விசுவாசத்தையும், வெள்ளை நிறம் இயேசுவின் பரிசுத்தத்தையும் காட்டுவதாக உள்ளது.
0 Comments