அறிந்து கொள்வோம்
பகுதி -83
ஊரீம், தும்மீம்
(Urim, Thummim)
இந்த வார்த்தைகளின் சரியான பொருள் ஏது என்று தெரியாது. “ஜோதிகள்” , ”பரிபூரணங்கள்” என்று பொருள்படும் என்று நம்பப்படுகிறது. மேலும் இது எந்த பெருளால் செய்யப்பட்டவை என்பதும் தெரியாது. எந்த வடிவில் செய்யப்பட்டது என்பதும் தெரியாது. ஆனால், இவை ஆசாரியனுடைய ஏபோத்துடன் இணைக்கப்பட்டிருந்த மார்பதக்கத்தினுள் வைக்கப்பட்டது. (யாத் 28.16,28-30).
ஆசாரியனுடைய மார்பதக்கம் (ஏபோத்)
இச்சன்னதக் கட்டைகள் இக்கட்டான வேளைகளில் தேவனுடைய சித்தத்தை அறிவதற்காகப் பயன்படுத்தப்பட்டன.
1. ஆகான் விஷயத்தில் - (யோசு 7)
2. சவுல் - யோனத்தான் விஷயத்தில் - (1சாமு 14 . 41,42)
3. தாவீதின் காலத்தில் - (1சாமு 23. 9-12.30. 7,8)
ஆகியோர் காலத்தில் இவை பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், இவை பயன்படுத்தப்பட்ட விதம் பற்றி தெரியாது.
வேதாகமம் தரும் தகவல்களை வைத்து ஆராய்கையில், இவற்றின் மூலமாக ”ஆம்” ”இல்லை” என்ற விடை மட்டும் தான் கிடைத்தது என்று நாம் அறியலாம். இப்படியாக, ஆகான் விஷயத்தில் குற்றவாளி கண்டுபிடிக்கப்படும் வரை நான்கு முறை இக்கட்டைகள் குலுக்கப்பட்டன என அறியலாம். அப்படியே சவுல், யோனத்தான் விஷயத்திலும் இரண்டுமுறை பயன்படுத்தப்பட்டன.
1இராஜாக்கள் 23. 9-12., 30. 7,8 ஆகிய இடங்களில் சவுல் அபியத்தாரிடம் ஏபோத்தைக் கொண்டு வா என்று கூறுகிறாகப் பார்க்கிறோம்.இங்கு தவறுதலாக ஊரீம், தும்மீம் என்பவைகளுக்குப் பதில் ”ஏபோத்து” என குறிப்பிடப்படுகிறது என்கிறார் மென்டல்சோன் (Mendelsohn) என்ற வேத பண்டிதர். ஏபோத்தினுள் இக்கட்டைகள் காணப்படடிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது.
0 Comments